குறள் தேனீ : அரும்புகள் பிரிவு
குறள் தேனீ இறுதிச்சுற்று : அரும்புகள் பிரிவின் 70 திருக்குறள்களின் பட்டியல்
Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints
11. செய்ந்நன்றி அறிதல் (Gratitude) குறள்கள்
103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது
பொருள்: இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.
English Version108
நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
பொருள்: ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.
English Version109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
பொருள்: முன் செய்த உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
English Version110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
பொருள்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
English Version