திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 129
அறத்துப்பால் (Virtue) - அடக்கமுடைமை (The Possession of Self-restraint)
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு
பொருள்: தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
The fire-burnt wounds do find a cure Tongue-burnt wound rests a running sore.
English Meaning: The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.